2010 மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சு பெற்றார்
செவ்வாய், அக்டோபர் 5, 2010
- 14 பெப்பிரவரி 2025: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 14 பெப்பிரவரி 2025: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
- 14 பெப்பிரவரி 2025: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
- 14 பெப்பிரவரி 2025: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது
- 14 பெப்பிரவரி 2025: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை

சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1950கள், 60கள், 70களில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளின் பயனாக 1978 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் உலகின் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தை லூயிசு பிரவுன் இங்கிலாந்தில் பிறந்தது. அதன் பின்னர் சுமார் 4 மில்லியன் குழந்தைகள் இம்முறை மூலம் பிறந்தன.
இவருடன் இணைந்து பணியாற்றிய பாட்றிக் ஸ்டெப்டோ 1988 இல் இறந்து விட்டார்.
உலகளவில் பத்து சதவீதமான மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் எட்வர்ட்சின் ஆய்வுகள் அந்தத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தணுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம் (In-vitro fertilisation - IVF).
ராபர்ட்சுக்கு நோபல் பரிசு கிடைத்தது “நல்ல செய்தி” என லூயிசு பிரவுன் தெரிவித்தார். "ஐவிஎஃப் இன் முன்னோடி ஒருவர் இப்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பது எனக்கும் எனது தாயாருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர்.
மூலம்
- British IVF pioneer Robert Edwards wins Nobel prize, pipisi, aktoopar 4, 2010
- Vatican official criticises Nobel win for IVF pioneer, பிபிசி, அக்டோபர் 4, 2010
- [http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2010/press.html The Nobel Prize in Physiology or Medicine 2010
Robert G. Edwards], நோபல்பிறைஸ்.ஓர்க், அக்டோபர் 4, 2010