அணு உலைகளை முற்றாக மூடிவிட செருமனி முடிவு
- 17 பெப்ரவரி 2025: 67பி வால்வெள்ளியில் ஆக்சிசன், ரொசெட்டா விண்கலம் கண்டுபிடித்தது
- 17 பெப்ரவரி 2025: ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியின் சுற்றுவட்டத்தை அடைந்தது
- 17 பெப்ரவரி 2025: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 17 பெப்ரவரி 2025: இரண்டரை ஆண்டுகளாக உறக்கத்தில் இருந்த 'ரொசெட்டா' விண்கலம் விழித்தெழுந்தது
திங்கள், மே 30, 2011
2022 ஆம் ஆண்டிற்குள் செருமனியில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூடி விடுவதற்கு செருமனியின் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து சுற்றுச்சூழல் அமைச்சர் நோர்பர்ட் ரொட்சென் அரசின் இம்முடிவை அறிவித்தார்.
சப்பானில் சென்ற மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தை அடுத்து புக்குசீமா அணு உலை விபத்துக்குள்ளானது. இவ்விபத்தை அடுத்து உலகெங்கும் அணு உலைகளைப் பயன்படுத்தும் நாடுகள் தமது அணு உலைகளின் பாதுகாப்புக் குறித்து விளிப்படைந்தன. செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கெல் நாட்டின் அணு உலைகள் குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.
செருமனியின் பல பாகங்களிலும் அணு உலைகளை மூடி விடுமாறு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
சப்பானிய அணு உலை விபத்தை அடுத்து செருமனியின் மிகப் பழமையான ஏழு அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன. இவை மீண்டும் பாவிக்கப்பபட மாட்டா என ரொட்ச்சென் ஆறிவித்தார். வடக்கு செருமனியில் உள்ள எட்டாவது உலை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக மூடப்பட்டது. இது நிரந்தரமாகவெ மூடப்பட்டு விட்டதாக அவர் அறிவித்தார்.
மேலும் ஆறு அணு உலைகள் 2021 ஆம் ஆண்டில் மூடப்படும். அண்மையில் அமைக்கப்பட்ட மூன்று புதிய உலைகள் 2022 ஆம் ஆண்டில் மூடப்பட விருக்கிறது.
மூலம்
[தொகு]- Germany: Nuclear power plants to close by 2022, பிபிசி, மே 30, 2011
- Germany pledges nuclear shutdown by 2022, கார்டியன், மே 30, 2011