அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 17 பெப்ரவரி 2025: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
சனி, சூன் 25, 2011
அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான அலாஸ்காவின் அலூசியன் தீவுகளுக்கு அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நூற்றுக்கனக்கான மக்கள் மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
உள்ளூர் நேரப்படி வியாழன் அன்று இரவு 07:10 மணியளவில் அடுத்ததடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோளில் 7.4, 7.2 புள்ளிகளாகப் பதிவானயின. டச்சுத் துறைமுகத்தில் இருந்து 130 கிமீ வடகிழக்கே 40 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம் கொண்டிருந்தன. துறைமுகப் பகுதியில் சுமார் 4,400 பேர் வசிக்கின்றனர்.
சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டவுடன் மக்கள் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். துறைமுகப் பகுதிகளில் இருந்து மீன்பிடிப் படகுகள் கரையில் இருந்து கடலுக்குள் வெளியேறிச் சென்றன.
ஆனாலும் ஒரு மணி நேரத்தின் பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சேத விபரங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
மூலம்
[தொகு]- Huge Alaskan quake triggers tsunami alert, தி ஆஸ்திரேலியன், சூன் 24, 2011
- அலாஸ்காவில் அடு்த்தடுத்து 2 பூகம்பங்கள்: சுனாமி எச்சரிக்கை!, தட்ஸ்தமிழ், சூன் 24, 2011
- அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம், தினமலர், சூன் 25, 2011