ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
Jump to navigation
Jump to search
ஆப்பிரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
- 22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்
- 4 சனவரி 2018: தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி
- 15 அக்டோபர் 2017: சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி
- 12 சனவரி 2017: புர்கா விற்பனைக்கும் உற்பத்திக்கும் மொராக்கோவில் தடை
- 22 திசம்பர் 2016: சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்
ஆப்பிரிக்காவின் அமைவிடம்
சனி, சூன் 14, 2014
ஆப்பிரிக்கக் காடுகளில் தந்தத்திற்காக கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கென்யா, தான்சானியா, மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் அதிகளவாக 80% யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த வேலைகளை வியாபாரத்தில் கள்ளத்தனமாக செயல்படும் மாபியா கும்பல் நடத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஆசியப் பகுதிகளிலும் நடக்கிறது ஆனால் துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை என்று சர்வதேச வனவிலங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. யானைகள் சீன சர்க்கஸ்களுக்கும், தாய்லாந்து சுற்றுலாத் துறைக்கும் இங்கிருந்து அனுப்பப்படுவதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.
மூலம்[தொகு]
- ஆப்பிரிக்காவில் 20,000 யானைகள் தந்தத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளன, தி இந்து (தமிழ்), சூன் 14, 2014
- Nearly 70 elephants slaughtered by poachers at national park in Africa, நியூயார்க் டெய்லிநியூஸ், சூன் 14, 2014