இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது ஐநா அவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது
Appearance
தொடர்புள்ள செய்திகள்
விக்கிசெய்திகளில் ஐக்கிய நாடுகள்

- பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
- இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் பேரவை ஆதரவு
- ஐநா பொதுச்சபையில் சிரியாவுக்கு எதிராக மீண்டும் தீர்மானம், சீனா, உருசியா கடும் எதிர்ப்பு
- ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
- பொலிவியத் தலைவர் பயணம் செய்த விமானத்தில் சோதனை, ஐநாவிடம் முறையிட முடிவு
வியாழன், மார்ச் 21, 2013
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு தீர்மானத்தின் முன்வரைவினை இக்கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீர்மான முன்வரைவின் மீது விவாதித்து, பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்திட இன்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் முன்வரைவைத் தாக்கல் செய்தபிறகு இரண்டு முறை அதில் திருத்தங்களை அமெரிக்க ஐக்கிய நாடு செய்துள்ளது. ஆக, இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்வரைவின் பதிப்பு எண், 3 ஆகும். திருத்தங்களினால் தீர்மானம் நீர்த்துப் போய்விட்டதாக 'அனைத்துலக மன்னிப்பு அவை (Amnesty International)' வருத்தம் தெரிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு தினத்தந்தி, மார்ச் 21, 2013
- அமெ. - இலங்கை மோதல் இன்று; முழு ஆதரவும் தமக்கே என்கிறார் டொனஹே உதயன், மார்ச் 21,2013
- Has U.S. watered down Sri Lanka resolution? தி இந்து, March 20, 2013
- Revised U.S. resolution on Sri Lanka for UNHRC தி இந்து, March 19, 2013