இலங்கையின் கிழக்கில் 16 தமிழ் பொதுமக்கள் படையினரால் கைது
Appearance
செவ்வாய், சூன் 29, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 16 தமிழ் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை செல்லிட தொலைபேசிகளில் வைத்திருந்தமை, காணொளிகளை கொண்டிருந்தமை போன்ற காரணங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதிகளில் இருந்து 16 தமிழ் மக்களை இலங்கைப் படையினர் கடந்த வாரம் கைது செய்துள்ளனர்.
படுவான்கரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள ஏனைய பிரதேசங்களில் இலங்கைப் படையினரின் தேடுதல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்
[தொகு]- கிழக்கு மாகாணத்தில் 16 தமிழ் பொதுமக்கள் படையினரால் கைது, நாம்தமிழர், ஜூன் 24, 2010