இலங்கையில் பெண் பத்திரிகையாளர் படுகொலை
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
திங்கள், பெப்ரவரி 3, 2014
இலங்கையின் மூத்த வணிக ஊடகவியலாளர் மெல் குணசேகர (வயது 46) கொழும்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடல் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று கத்திக் குத்து காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மெல் குணசேகரவின் பெற்றோரும் சகோதரனும் தேவாலயத்திற்கு ஞாயிறு காலை ஆராதனைக்கு சென்றிருந்த வேளையிலேயே இவர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு தொம்பேயைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மெல் குணசேகர பிட்ச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாகப் பணியாற்றினார். ஏ. எப். பி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராகவும் பணியாற்றியிருந்தார்.
மூலம்
[தொகு]- SUSPECT ARRESTED OVER MURDER OF MEL GUNASEKERA, அததெரண, பெப்ரவரி 3, 2014
- Journalist Mel Gunasekera murdered, டெய்லி மிரர், பெப்ரவரி 2, 2014
