இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம்
Appearance
திங்கள், சனவரி 11, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 14 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 14 பெப்பிரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 14 பெப்பிரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 14 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 14 பெப்பிரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் சனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். முதலில் பலாலி விமானப்படைத்தளம் சென்ற அதிபர் அங்கே இராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார் பின்னர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சென்று பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
தனது உரையின் போது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு முழு சதந்திரத்தோடு வாழும் உரிமை உள்ளது என்று கூறினார். அதைவிட வடக்கின் நீர்ப்பாசனம் விருத்திசெய்யப்படும் என்றும் அதற்கு மகாவலி கங்கையின் நீர் வடக்கு நோக்கி திருப்பப்படும் என்றும் உறுதி வழங்கினார்.
மூலம்
- President visits Palaly base டெய்லி மிரர் இணையம்
- தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான நீதியான அரசியல் தீர்வு வழங்கபப்டும்-யாழ்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு வீரகேசரி இணையம்