இலங்கை தெற்கு, மேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி
Appearance
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
ஞாயிறு, மார்ச் 30, 2014
இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணசபைகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தல்களில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்று இரண்டு சபைகளையும் கைப்பற்றியது.
மேல் மாகாணசபையில் ஐமசுகூ 56 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 28 இடங்களையும் சரத் பொன்சேக்காவின் சனநாயகக் கட்சி 9 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) 6 இடங்களையும், மனோ கனேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசு 2 இடங்களையும் கைப்பற்றின.
தெற்கு மாகாண சபையில் ஐமசுகூ 33 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 5 இடங்களையும் சனநாயகக் கட்சி 3 இடங்களையும் கைப்பற்றின.
மூலம்
[தொகு]- Comfortable victory for UPFA, டெய்லிமிரர், மார்ச் 30, 2014