இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது
தோற்றம்
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி
- 17 பெப்ரவரி 2025: இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல்
- 17 பெப்ரவரி 2025: இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு
இலங்கையின் அமைவிடம்
திங்கள், பெப்ரவரி 10, 2014
சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினத்திற்குக் கிழக்கே 48 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் செய்யப்பட்டனர். இவர்களின் 5 விசைப்படகுகளும் ஐயாயிரம் கிலோ மீன்களும் இந்தியக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 25 பேரையும் கடலோர காவல் படையினர், காரைக்கால் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நாகை கீழையூர் கடலோர காவல் படையினரிடம், கடலோர காவற்படை கமாண்டர் உதல்சிங் ஒப்படைத்தார். கைதான 25 பேரும் இன்று மதியம் நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.
மூலம்
[தொகு]- இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது, நியூஸ் பெர்ஸ்ட், பெப்ரவரி 10, 2014
- 25 இலங்கை மீனவர்கள் கைது, ஹிரு, பெப்ரவரி 10, 2014