உக்ரேனில் தொடருந்தும் பேருந்தும் மோதியதில் 37 பேர் உயிரிழப்பு
Appearance
செவ்வாய், அக்டோபர் 12, 2010
உக்ரைனில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கிழக்கு உக்ரைனில் இரண்டு இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்
- 17 பெப்ரவரி 2025: கிரிமியாவில் இருந்து தமது படையினரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது
உக்ரைனின் அமைவிடம்
கிழக்கு உக்ரைனில் தொடருந்து ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

உக்ரைனின் தினிப்புரோபெத்ரோவ்ஸ்க் பகுதியில் அர்ஜனீகித்செ என நகரில் இன்று காலை உள்ளூர் நேரம் 0900 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
பயணிகளை ஏற்றி வந்த பேருந்து தொடருந்துக் கடவை ஒன்றைக் கடக்க முயல்கையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கடவையை நோக்கி வந்த புகைவண்டி எழுப்பிய ஒலியை பேருந்தின் சாரதி சட்டை செய்யாமல் கடக்க முற்பட்டார் என ஏபி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
- 'Thirty-seven' people killed in Ukraine bus-train crash, பிபிசி, அக்டோபர் 12, 2010
- Ukraine train, bus collision kills 37, டைம்ஸ் ஒஃப் இந்தியா, அக்டோபர் 12, 2010