உக்ரைனில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கிழக்கு உக்ரைனில் இரண்டு இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்
- 17 பெப்ரவரி 2025: கிரிமியாவில் இருந்து தமது படையினரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது
வியாழன், பெப்ரவரி 14, 2013
உக்ரைனின் கிழக்கே தனியெத்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று நேற்றுத் தரையிறங்குகையில் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பற்றியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனராயினும், பெரும்பாலான பயணிகள் தாமாகவே விமானத்தை விட்டு வெளியேறியதாக விமானநிலையப் பேச்சாளர் கூறினார்.
ஒடேசாவில் இருந்து தனியெத்ஸ்கிற்கு காற்பந்தாட்ட இரசிகர்களை ஏற்றி வந்த அண்டோனொவ் ஆன்-24 ரக விமானமே விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 45 பேர் இருந்ததாகவும், 39 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையில் இருந்து 700 மீட்டர்கள் தொலைவில் வயல் பகுதி ஒன்றில் தரையிறங்கி மூன்று பகுதிகளாக சிதறியது.
விபத்துக்கான காரணங்களை அறிய உக்ரைன் பிரதமர் மிக்கோலா அசாரொன் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களில் ஒடேசாவின் பல அரசு அதிகாரிகளும் அடங்குவர்.
அண்மைக் காலங்களில் ஆன்-24 விமானங்கள் சில விபத்துக்குள்ளாகியுள்ளன. 2010-2011 காலப்பகுதியில் நான்கு விபத்துகளில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- AN-24 crash-landing kills 5 in Donetsk, ஆர்டி, பெப்ரவரி 14, 2013
- Five dead as plane makes emergency landing in Ukraine, ஏஎஃப்பி, பெப்ரவரி 13, 2013
- Fifth Body Found in Ukrainian Plane Wreckage, ரியாநோவஸ்தி, பெப்ரவரி 14, 2013
