உக்ரைன் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யனுக்கோவிச் முன்னணியில்
செவ்வாய், பெப்ரவரி 9, 2010
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கிழக்கு உக்ரைனில் இரண்டு இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர்
- 17 பெப்ரவரி 2025: கிரிமியாவில் இருந்து தமது படையினரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது
உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய எதிர்கட்சித் தலைவரான விக்டர் யனுக்கோவிச், பிரதமர் திருமதி யூலியா திமோசென்கோவை விட மிகச்சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார் என்று உக்ரைனின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கு மக்களாட்சி சிறப்பாகப் புலனாகியது என்று அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் தீர்ப்பை மதித்து, அதிகாரத்தை முறைப்படி கையளிக்க உக்ரைனியத் தலைவர்கள் தயாராக வேண்டும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவுக்கான அமைப்பு கேட்டுள்ளது. ஆனாலும் பிரதமர் திமொசென்கோ தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கவில்லை.
அந்த அமைப்பின் தலைவரான ஜோஸ் சோயரஸ் கருத்து வெளியிடும் போது உக்ரையினின் தேர்தல் ஆணையம் ஒளிவு மறைவின்றி பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் யனுக்கோவிச் 48.83% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். தொமொசென்கோ 45.59% வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்டர் யனுக்கோவிச் ரஷ்ய சார்புடையவர் என்று கருதப்படுகிறது.
மூலம்
[தொகு]- "Ukraine's Tymoshenko bloc 'contesting election result'". பிபிசி, பெப்ரவரி 9, 2010
- Ukraine's Tymoshenko rejects result, ராய்ட்டர்ஸ், பெப்ரவரி 9, 2010