ஊடகவியலாளர் திசைநாயகத்திற்கு பன்னாட்டு ஊடக சுதந்திரத்திற்கான விருது
Appearance
ஞாயிறு, நவம்பர் 22, 2009
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்பிரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்பிரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்பிரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
இலங்கையில் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜெ.சி.திசைநாயகத்திற்கு சீ.பீ.ஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு பன்னாட்டு ஊடக சுதந்திரத்திற்கான விருதினை அறிவித்து கௌரவித்துள்ளது.
உள்நாட்டில் தமது கடமை காரணமாக அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு விருது வழங்கி கௌரவிக்கும் ஊடகவியலாளர்களில் இம்முறை ஜே.எஸ்.திசைநாயகம் விருதுக்குரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் மாதாந்த சஞ்சிகையொன்றில் செய்திக்கட்டுரைகளை எழுதி வந்த ஊடகவியலாளர் திசைநாயகம் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்
[தொகு]- பிபிசி தமிழோசை