ஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு பொது மன்னிப்பு
Appearance
திங்கள், மே 3, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 14 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 14 பெப்பிரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 14 பெப்பிரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 14 பெப்பிரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 14 பெப்பிரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
பயங்கரவாதத்துக்குத் துணை போனதாகக் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இலங்கை ஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் இன்று அறிவித்தார்.
ஈழத்தமிழர்களின் பிரிவினைப் போராட்டம் பற்றி ஜெயப்பிரகாச்ஜ் திசைநாயகம் தனது பத்திரிகையில் எழுதி வந்தார்.
உலக ஊடகவியலாளர் சுதந்திர நாளை ஒட்டி இந்த மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார்.
திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தன.
சென்ற ஜனவரி மாதம் திசைநாயகம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூலம்
[தொகு]- MR pardons Tissainayagam டெய்லி மிரர், மே 3, 2010
- Sri Lankan president pardons convicted Tamil editor, பிபிசி, மே 3, 2010