காசாவில் இசுரேல் நடத்திய வான் தாக்குதலில் 12 பாலத்தீனியர்கள் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு
சனி, மார்ச் 10, 2012
காசாவில் இடம்பெற்ற இசுரேலிய வான் தாக்குதல் ஒன்றில் மூத்த போராளித் தலைவர் உட்பட 12 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
சொகைர் அல்-காய்சி என்பவர் இசுரேலின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும், அதனாலேயே அவர் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்திருக்கிறது. பல ராக்கெட் தாக்குதல்கள் இசுரேல் நோக்கி நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு கூறியுள்ளது. இசுலாமிய ஜிகாட் குழு தமது போராளிகளில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர் என இசுரேலியப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களுக்குப் பின்னர் காசாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இசுரேலியர்களின் தாக்குதலுக்கு தாம் பதிலடி கொடுப்போம் என பிஆர்சி என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மூலம்
[தொகு]- Israel launches deadly air strikes on Gaza, மார்ச் 10, 2012
- Israel kills 10 Palestinian militants in Gaza strikes, இமாலயன் டைம்ஸ், மார்ச் 10, 2012