குவாண்டானாமோ சிறையை மூடி வேறு இடத்தில் அமைக்க முடிவு
புதன், திசம்பர் 16, 2009
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 17 பெப்ரவரி 2025: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
கியூபாவின் தீவிலுள்ள குவாண்டானாமோ சிறைச்சாலையை மூடிவிட்டு வேறொரு இடத்தில் புதிய சிறைச்சாலையை அமைக்கும் யோசனையை அமெரிக்கா விரைவில் அறிவிக்கவுள்ளது.
குவாண்டானமோவிலுள்ள கைதிகள் சிலரை விடுதலை செய்த பின்னர் ஏனையோரை அமெரிக்காவின் இலினோயி மாநிலத்திலுள்ள தொம்சன் என்ற இடத்தில் சிறைவைக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இப்புதிய சிறைச்சாலை சிகாகோ நகரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள மிசிசிப்பி நதியின் அருகாமையில் அமைக்கப்படவுள்ளது.
இங்கு பாவிக்கப்படாமலுள்ள அரச கட்டடமொன்று சிறைச்சாலையாக மாற்றப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படவுள்ளது. தொம்சன் என்ற இடத்தில் அமையவுள்ள புதிய சிறைச்சாலை போதிய வசதிகளைக் கொண்டுள்ளதாக இலினோயி மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பேச்சுக்கள் அமெரிக்காவின் மத்திய அரசின் அதிகாரிகளுக்கும் மாநில அரசின் அதிகாரிகளுக்குமிடையே நடைபெறவுள்ளன. ஒபாமா பதவியேற்ற போது குவான்தனமோ சிறைச்சாலையை மூடப்போவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்
- குவான்தனமோ சிறைச்சாலையை மூடி வேறு இடத்தில் அமைக்க முடிவு, தினகரன், டிசம்பர் 16, 2009
- "Guantanamo inmates 'to be sent to Illinois prison'". பிபிசி, 15 டிசம்பர் 2009
- U.S. said to pick Illinois prison to house detainees,New York Times,15 டிசம்பர் 2009