கென்யாவில் கிறித்தவக் கோயில் பாடசாலை மீது தாக்குதல்
தோற்றம்
கென்யாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீது ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றச்சாட்டு
- 17 பெப்ரவரி 2025: நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்
- 17 பெப்ரவரி 2025: கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது
கென்யாவின் அமைவிடம்
ஞாயிறு, செப்டெம்பர் 30, 2012
கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள கிறித்தவக் கோயில் ஒன்றில் ஞாயிறுப் பாடசாலை மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
சோமாலியாவின் அல்-சபாப் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற நெரிசலில் சிக்கியே பல சிறுவர்கள் காயமடைந்தனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இத்தாக்குதலின் பின்னர் அருகில் உள்ள அலாபின் மசூதி சில இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளானது.
ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருடன் இணைந்து கென்யாப் படையினர் இவ்வார ஆரம்பத்தில் சோமாலியாவின் கிஸ்மாயோ நகரில் இருந்து அல்-சபாப் போராளிகளை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
மூலம்
[தொகு]- Deadly Kenya grenade attack hits children in church, பிபிசி, செப்டம்பர் 30, 2012
- Child killed in Kenya church grenade attack, ராய்ட்டர்ஸ், செப்டம்பர் 30, 2012