கொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம்
தோற்றம்
வெள்ளி, திசம்பர் 25, 2009
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி
- 17 பெப்ரவரி 2025: இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல்
- 17 பெப்ரவரி 2025: இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு
இலங்கையின் அமைவிடம்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இரவு தொடருந்து வண்டி அநுராதபுரம் அருகில் கல்கமுவ என்ற இடத்தில் நேற்று வியாழன் அதிகாலை தடம் புரண்டதில் 36 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் 28 பேர் கல்கமுவ அரசாங்க மருத்துவ மனையிலும் மேலும் எட்டுப் பேர் அநுராதபுரம் அரச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
நான்கு பெட்டிகள் பாதையை விட்டுத் தூக்கி எறியப்பட்டுள்ளதால், தொடருந்தூப் பாதைகள் பெரும் சேதமுற்றுள்ளன. அதனைச் சரிசெய்யும் வரை கொழும்பு வவுனியா தொடருந்து சேவைகள் மாகோ வரையே இடம்பெறுமெனவும் வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் புறப்படும் ரயில்கள் அநுராதபுரம் வரை சேவையிலீடுபடும் எனவும் ரயில்வே உயரதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Train derails at Galgamuwa, at least 20 passengers injured, டெய்லி மிரர், டிசம்பர் 24, 2009
- வவுனியா - கொழும்பு இரவு ரயில் கல்கமுவயில் தடம்புரள்வு: 36 பேர் காயம், தினகரன், டிசம்பர் 25, 2009