கொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம்
தோற்றம்
வெள்ளி, திசம்பர் 25, 2009
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இரவு தொடருந்து வண்டி அநுராதபுரம் அருகில் கல்கமுவ என்ற இடத்தில் நேற்று வியாழன் அதிகாலை தடம் புரண்டதில் 36 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் 28 பேர் கல்கமுவ அரசாங்க மருத்துவ மனையிலும் மேலும் எட்டுப் பேர் அநுராதபுரம் அரச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
நான்கு பெட்டிகள் பாதையை விட்டுத் தூக்கி எறியப்பட்டுள்ளதால், தொடருந்தூப் பாதைகள் பெரும் சேதமுற்றுள்ளன. அதனைச் சரிசெய்யும் வரை கொழும்பு வவுனியா தொடருந்து சேவைகள் மாகோ வரையே இடம்பெறுமெனவும் வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் புறப்படும் ரயில்கள் அநுராதபுரம் வரை சேவையிலீடுபடும் எனவும் ரயில்வே உயரதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.
மூலம்
- Train derails at Galgamuwa, at least 20 passengers injured, டெய்லி மிரர், டிசம்பர் 24, 2009
- வவுனியா - கொழும்பு இரவு ரயில் கல்கமுவயில் தடம்புரள்வு: 36 பேர் காயம், தினகரன், டிசம்பர் 25, 2009