சப்பானில் 7.3 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை
ஜப்பானில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 18 ஏப்ரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்
- 17 ஏப்ரல் 2016: ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை
- 16 ஏப்ரல் 2016: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்
- 9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
ஜப்பானின் அமைவிடம்
வெள்ளி, திசம்பர் 7, 2012
சப்பானின் கிகக்குக் கரைக்கப்பால் இன்று 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சிறிய அளவு ஆழிப்பேரலை ஏற்பட்டது. கமியாசி நகரில் இருந்து 245 கிமீ தூரத்தில் 36 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் ஏனைய பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை இன்று உள்ளூர் நேரம் 19:20 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ, பெரும் சேதங்களோ ஏற்படவில்லை.
2011 மார்ச் 11 ஆம் நாள் சப்பானைத் தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் , மற்றும் ஆழிப்பேரலையால் 15,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 3,200 பேர் வரையில் காணாமல் போயினர்.
மூலம்[தொகு]
- Japan earthquake sparks tsunami scare, பிபிசி, டிசம்பர் 7, 2012
- Japan Earthquake: Tsunami Wave Hits City, ஸ்கை நியூஸ், டிசம்பர் 7, 2012