சென்னை அருகே படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 17 பெப்ரவரி 2025: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
திங்கள், திசம்பர் 26, 2011
சென்னை அருகே உள்ள பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. படகில் 25க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. படகு பாரம் தாங்க முடியாமல், ஏரியின் நடுவில் கவிழ்ந்தது. 22 பேர் நீர்ல் மூழ்கி உயிரிழந்தனர். 3 குழந்தைகளை மட்டுமே மீன்பிடிப் படகுகளால் உயிருடன் மீட்கமுடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீட்புப் பணியில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி சுற்றுலாத் தலமாகும். அபாயகரமான ஏரியும் கூட. இருப்பினும் பலரும் இங்கு சுற்றுலா சவாரியாக படகுச் சவாரி செய்வது வழக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- 22 killed as boat capsizes in Pulicat lake near Chennai,thehindu, டிசம்பர் 25, 2011
- 22 killed as boat capsizes in lake near Chennai,indianexpress, டிசம்பர் 25, 2011
- 22 killed as boat capsizes in lake near Chennai, deccanchronicle, டிசம்பர் 25, 2011
- பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: பலர் பலி,பிபிசி, டிசம்பர் 25, 2011
- சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி ,theprovince, தட்ஸ்தமிழ் 25, 2011