சேர்பியாவில் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு
புதன், நவம்பர் 3, 2010
- 17 பெப்ரவரி 2025: போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
- 17 பெப்ரவரி 2025: செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி
- 17 பெப்ரவரி 2025: செர்பியப் போர்க்குற்றவாளி மிலாடிச் மீதான வழக்கு ஆரம்பம்
- 17 பெப்ரவரி 2025: 2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி
- 17 பெப்ரவரி 2025: குரோவாசியப் போர்க்குற்றம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த கொரான் காத்சிச் செர்பியாவில் கைது
சேர்பியாவின் மத்திய பகுதியில் இன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
5.3 அளவு நிலநடுக்கம் தலைநகர் பெல்கிரேடிலிருந்து 150 கிமீ தென்மேற்கே கிரசேவோ நகருக்கு அருகே 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி இது இன்று அதிகாலை 0156 (0056 GMT) மணிக்கு இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் மருத்துவமனை உட்பட சில கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் பல வீடுகளுக்கு நீர், மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீடு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இருவர் கொல்லப்பட்டதாக செர்பியாவின் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
70,000 பேர் வசிக்கும் இந்நகரத்தில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணியாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- Earthquake kills two in central Serbia, பிபிசி, நவம்பர் 3, 2010
- Earthquake rattles Serbia, சீநியூஸ், நவம்பர் 3, 2010
