தார்பூர் தாக்குதலில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஐநா அமைதிப்படை வீரர் உயிரிழப்பு
தோற்றம்
சூடானில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு
- 17 பெப்ரவரி 2025: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்
- 17 பெப்ரவரி 2025: எல்லைப்பகுதியில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றை அமைக்க இரு சூடானியத் தலைவர்களும் இணக்கம்
சூடானின் அமைவிடம்
செவ்வாய், ஆகத்து 14, 2012
சூடானின் தார்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் அங்கு பணியாற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய-ஐக்கிய நாடுகள் கூட்டு அமைதிப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த அமைதிப்படை வீரர் 40 வயதுள்ள அஜ்கார் அலி என்னும் வங்காளதேச நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வங்காளதேசப் பத்திரிகை டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
"உள்ளூர் இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றின் காவல்துறை அலுவலகத்தைச் சுற்றிவளைத்த ஆயுததாரிகள் காவல்துறையினர் மீது சுட்டதில் இவர் உயிரிழந்தார்," ஐநா நிறுவனம் அறிவித்துள்ளது.
தெற்கு தார்பூரின் தலைநகர் நியாலாவில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றிய-ஐக்கிய நாடுகள் கூட்டு அமைதிப் படையைச் சேர்ந்த வேறொருவர் காயமடைந்தார்.
மூலம்
[தொகு]- Peacekeeper Shot Dead in Sudan’s Darfur, ரியாநோவஸ்தி, ஆகத்து 12, 2012
- Bangladesh peacekeeper shot in Darfur, நியூஸ் 24, ஆகத்து 12, 2012
