நைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: 123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்
- 17 பெப்ரவரி 2025: நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்
- 17 பெப்ரவரி 2025: நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு
திங்கள், ஏப்ரல் 25, 2011
நைஜீரிய அரசுத்தலைவர் தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 500 பேர் உயிரிழத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் குட்லக் ஜொனத்தன் பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ சர்வாதிகாரி முகமுது புகாரி தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜொனத்தனின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால்தான் ஜொனத்தன் வெற்றி பெற்றதாகக் கூறி, புகாரி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியதில் வன்முறை வெடித்தது. அதில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் வடக்கு பகுதி, தெற்குப் பகுதி என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இசுலாமியர்களும், தெற்கு பகுதியில் கிறித்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். தெற்குப் பகுதியைக் காட்டிலும் வடக்கு பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியிருப்பது மக்களிடையே வெறுப்பை அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்
[தொகு]- நைஜீரியாவில் அதிபர் தேர்தல் :500 பேர் பலி, தினமலர், ஏப்ரல் 25, 2011
- நைஜீரியாவில் கலவரம் : பலி 200 ஆக உயர்வு, தமிழ்முரசு ஏப்ரல் 22, 2011