பப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்
வியாழன், திசம்பர் 31, 2009
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியா - பப்புவா நியூ கினி புதிய உடன்பாட்டின் படி 40 அகதிகள் மானுஸ் தீவை சென்றடைந்தனர்
- 17 பெப்ரவரி 2025: படகு அகதிகள் ஆத்திரேலியாவில் இனித் தஞ்சம் கோர முடியாது, கெவின் ரட் திடீர் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: முதல் தொகுதி அகதிகள் குழுவை ஆத்திரேலியா மானுஸ் தீவுக்கு அனுப்பியது
- 17 பெப்ரவரி 2025: பப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்
- 17 பெப்ரவரி 2025: அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி
பப்புவா நியூ கினியில் இலகு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதன் விமானி ரிச்சார்ட் லியாகி கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
பப்ப்புவா நியூ கினியின் வடமேற்குக் கரையில் மரோபி மாகாணத்தின் மலைப்பகுதியில் நேற்றுப் பறந்து கொண்டிருக்கையில் விமானத்தின் இயந்திரப் பகுதியில் தீப்பிடித்துத் தரையில் மோதியது.
உயிர் தப்பிய விமானி (அகவை 68) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். 47 வீதமான அவரது உடல் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது என அவரது தந்தை நிக்கலாஸ் லியாகி தெரிவித்தார்.
கொல்லப்பட்ட அனைத்துப் பயணிகளும் பாப்புவா நியூ கினியைச் சேர்ந்தவர்கள். நான்கு பெரிவர்களும், இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.
விபத்து நடந்த இடத்தை அடைந்த மரோபி மாகான காவல்துறை உயரதிகாரி கமாண்டர் பீட்டர் கின்னஸ், "விமானம் முற்றாகச் சேதமடைந்துள்ளது, எதுவும் செய்வதற்கில்லை," எனத் தெரிவித்ததாஅக உள்ளூர் தேசியத் தினசரி அறிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியில் கோக்கோடா என்ற இடத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற வேறொரு விமானவிபத்தில் 9 ஆஸ்திரேலிய உல்லாசப் பயணிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Pilot Richard Leahy survives as six die in PNG plane crash, தி ஆஸ்திரேலியன், டிசம்பர் 31, 2009
- Plane crash: Six dead as Aussie pilot fights for life, சிட்னி மோர்னிங் ஹெரால்ட், டிசம்பர் 31, 2009