பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகள் சிறை உடைப்பு, 31 கைதிகள் விடுவிப்பு
தோற்றம்
ஞாயிறு, திசம்பர் 13, 2009
பிலிப்பைன்சில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: போர்னியோவில் பிலிப்பீனிய ஆயுதக் கும்பல் மீது மலேசிய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது
பிலிப்பைன்சின் அமைவிடம்
இசுலாமியத் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் இன்று தெற்கு பிலிப்பைன்சில் சிறை ஒன்றைத் தாக்கி 31 கைதிகளை விடுவித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறை உடைப்பின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சிறைக் காவலாளி உடப்ட 2 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமது சகாக்களை விடுவிக்கும் பொருட்டே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பசிலான் தீவின் உதவி ஆளுநர் அல் பசீத் சகலாகுல் தெரிவித்தார்.
ஞாயிறன்று அதிகாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் தப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டில் அபு சயாஃப் தீவிரவாதிகள் மூவர் சிறையில் இருந்து தப்பியிருந்தனர். 2007 இல் இடம்பெற்ற சிறை உடைப்பில் 16 பேர் தப்பியிருந்தனர்.
மூலம்
- Islamists flee Philippines prison after militants' raid, பிபிச், டிசம்பர் 13, 2009