பிலிப்பைன்சில் பேருந்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு
தோற்றம்
வியாழன், அக்டோபர் 21, 2010
பிலிப்பைன்சில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: போர்னியோவில் பிலிப்பீனிய ஆயுதக் கும்பல் மீது மலேசிய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது
பிலிப்பைன்சின் அமைவிடம்
பிலிப்பைன்சின் மிண்டானாவோ என்ற தெற்குத் தீவில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 பேர் வரையில் பயணம் செய்த இப்பேருந்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை இத்தாக்குதல் இடம்பெற்றது.
இக்குண்டுவெடிப்பு யாரால் மேற்கொள்ளப்பட்டதென்பது உடனடியாகத் தெரியவில்லை எனினும், இப்பகுதியில் இசுலாமியத் தீவிரவாதிகள், மற்றும் கடத்தல்காரர்கள் பெருமளவு உலவி வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பேருந்து நிறுவனத்திற்கு ஆயுதக்குழுக்களிடம் இருந்து எச்சரிக்கைகள் கடந்த சில நாட்களாக வந்திருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Bomb kills nine on Philippine bus, பிபிசி, அக்டோபர் 21, 2010
- Deadly blast hits Philippines bus, அல்ஜசீரா, அக்டோபர் 21, 2010