லெபனானில் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சி இணக்கம்
ஞாயிறு, நவம்பர் 8, 2009
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: லெபனானின் முன்னாள் நிதி அமைச்சர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: லெபனானில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 16 படையினர் கொல்லப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: பெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு
லெபனான் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சியான ஹெஸ்புல்லா ஒப்புக் கொண்டது. இதன் மூலம் கடந்த ஐந்து மாதங்களாக நிலவி வந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
புதிய அரசு குறித்த அறிவிப்பை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சாட் ஹரிரி விரைவில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இசுரேல் ஊடுருவியபோது ஒரு தீவிரவாத அமைப்பாக உருவானது ஹெஸ்புல்லா அமைப்பு. சிரியா, ஈரான் ஆதரவிலான கட்சிகளின் ஒத்துழைப்போடு பிரதான கட்சியாக உருவெடுத்துள்ளது ஹெஸ்புல்லா. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதன் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பங்கேற்று அரசில் சேர ஒப்புக் கொண்டார்.
தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஹரிரிக்கு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளன.
30 பேரடங்கிய அமைச்சரவையில் ஹரிரி தலைமையிலான உறுப்பினர்கள் 15 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும். இதேபோல ஹெஸ்புல்லாவுக்கு 10 அமைச்சர்களும் அதிபர் மைக்கேல் சுலேமான் நியமனத்தில் 5 முக்கிய அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
மூலம்
[தொகு]- "தினமணி". பிபிசி, நவம்பர் 8, 2009
- "Lebanon government accord reached". பிபிசி, நவம்பர் 7, 2009