விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பு வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது: மலேசியா அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: காணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம்: மலேசியா அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து விட்டதாக மலேசியா அறிவிப்பு
சனி, மார்ச் 15, 2014
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் வான்பரப்பில் காணாமல் போன மலேசியா ஏர்லைன்சு 370 விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. இந்த விமானம் சில மணி நேரம் வானில் பறந்திருக்கலாம் என வெளியானத் தகவலையும் தற்போது மலேசியா ஒத்துக்கொண்டுள்ளது.

கோலாம்பூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பேசினார். அப்போது அவர், "விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது யாராலோ வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார். செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Missing Malaysia Airlines flight systems disabled, PM says, பிபிசி, மார்ச் 15, 2014
- Malaysia PM: plane diversion 'deliberate', அல்ஜசீரா, மார்ச் 15, 2014
