1811 இல் தொலைந்த அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 17 பெப்ரவரி 2025: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 17 பெப்ரவரி 2025: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
சனி, சனவரி 8, 2011
1811 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க மாநிலமான ரோட் தீவில் மூழ்கிய யூஎஸ்எஸ் ரிவெஞ்ச் என்ற அமெரிக்கக் கப்பலின் எச்சங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக சுழியோடிகள் சிலர் கூறியிருக்கின்றனர். இக்கப்பல் ஒலிவர் பெரி என்பவரின் தலைமையில் இயங்கியது.

பிரித்தானியக் கடற்படையினருடனான மோதலைத் தொடர்ந்து இந்தக் கப்பல் ரோட் தீவில் காணாமல்போயுள்ளது. ஒலிவர் பெரி பின்னர் 1813 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கடற்படையினருடன் ஒகையோவில் இடம்பெற்ற சண்டையில் வெற்றி பெற்றார். ரிவெஞ்ச் கப்பல் மூழ்கிய 200 வது ஆண்டு நிறைவு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற விருக்கிறது.
கப்பலின் சிதைவுகளை மீட்பதற்கு இச்சுழியோடிகள் அமெரிக்கக் கடற்படையினரின் உதவியை நாடியுள்ளனர். பிரித்தானியருடன் 1812 இல் ஆரம்பித்த போருக்கு முன்னோடியாக இடம்பெற்ற மோதல் ஒன்றிலேயே ரோட் தீவின் வாட்ச் ஹில் என்ற கரயோரப் பகுதில் இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. ஒகையோ போரின் பின்னர் ஒலிவர் பெரி, "நான் எதிரியைச் சந்தித்தேன், அவர்கள் நம்மவர்களே," எனக்கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலத்துக்குக் கீழ் உள்ள பாறைகள் குறித்தும் சுழியோடிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த ஆய்வின் போது கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூலம்
[தொகு]- Wreck of USS Revenge found by divers near Rhode Island, பிபிசி, சனவரி 7, 2011
- Divers: 1811 Wreck of Perry Ship Discovered Off U.S., ஃபொக்ஸ் நியூஸ், சனவரி 7, 2011
