இந்துக் கோயில் விவகாரம்: தாய்லாந்து கம்போடிய எல்லையில் மீண்டும் மோதல்
- 5 சூன் 2014: பண்டைய இந்து சிற்பங்கள் கம்போடியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டன
- 12 நவம்பர் 2013: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
- 15 அக்டோபர் 2012: கம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரடோம் சிகானூக் காலமானார்
- 30 மார்ச்சு 2012: கம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி
- 6 மார்ச்சு 2012: கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது
சனி, ஏப்பிரல் 23, 2011
தாய்லாந்து, மற்றும் கம்போடிய எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0d/Preah_Vihear_Temple.png/200px-Preah_Vihear_Temple.png)
இரு நாடுகளும் உரிமை கோரும் டா கிராபே கோயிலைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. இக்கோயில் பகுதி 900-ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற பிரியா விகார் கோயிலுக்கு 200 கிமீ மேற்கே அமைந்துள்ளது. பிரியா விகார் கோயில் உரிமை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை தொடரும் வேளையிலேயே புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். புதிய மோதல்கள் வெள்ளிக்கிழமை காலை 0600 மணியளவில் ஆரம்பித்ததாக தாய்லாந்து இராணுவத் தகவல் தொடர்பாளர் தெரிவித்தார். "சண்டையை நிறுத்துவதற்கு நாங்கள் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம்," என அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மோதலில் தமது தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து அறிவித்த அதே வேளையில், தமது தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்ததாக கம்போடியா அறிவித்துள்ளது.
பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிரியா விகார் கோயில் 1962 ஆம் ஆண்டு கம்போடியாவிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- இந்துக் கோயில் எல்லைப் போர் குறித்து கம்போடியா ஐநாவுக்கு முறையீடு, பெப்ரவரி 8, 2011
மூலம்
[தொகு]- Thailand and Cambodia clash again along border, பிபிசி, ஏப்ரல் 23, 2011
- Fresh clashes on Thailand-Cambodia border, அல்ஜசீரா, ஏப்ரல் 23, 2011