சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா ஒப்பந்தம்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
புதன், செப்டெம்பர் 7, 2011
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் என்.ரீ.பீ.சி. நிறுவனமும் கூட்டு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.
இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கையெழுத்திட்டனர்.
500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது.
இத்திட்டத்திற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும். 25 ஆண்டுகளுக்கு குறித்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.
இலங்கையில் அமைக்கப்படவுள்ள இந்த அனல் மின் நிலையம் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையமாகும். ஏற்கனவே புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை எனுமிடத்தில் சீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முதலாவது அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
மூலம்
[தொகு]- சாம்பூர் அனல் மின்நிலைய உடன்படிக்கை இன்று கைச்சாத்து, வீரகேசரி, செப்டெம்பர் 6, 2011
- சாம்பூர் அனல் மின் நிலையம்: இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து, தினகரன், செப்டெம்பர் 7, 2011
