சரத் பொன்சேகாவின் தரங்கள், பதக்கங்களை நீக்க அரசுத்தலைவர் அனுமதி
தோற்றம்
சனி, ஆகத்து 14, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி
- 17 பெப்ரவரி 2025: இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல்
- 17 பெப்ரவரி 2025: இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு
இலங்கையின் அமைவிடம்
நேற்று இராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவப் பதவிகள் அனைத்தையும் நீக்க நீதிமன்றம் இலங்கை அரசுத்தலைவரின் அனுமதியைக் கோரியிருந்தது. இன்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார். பொன்சேகா இதுவரை இராணுவத்தில் வகித்து வந்த ஜெனரல் பதவி உட்பட்ட தரங்கள் மற்றும் பதக்கங்கள் அனைத்தும் இதன் மூலம் பறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவர் இன்று முதல் சாதாரண பொதுமகனாகவே கருதப்படுவார். இராணுவத்தில் சேவையாற்றிய போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
தொடர்புள்ள செய்திகள்
மூலம்
- MR approves ruling டெய்லி மிரர் 14, 2010
- இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஜனாதிபதி அனுமதி : சரத் பொன்சேகா தரங்களையும் பதக்கங்களையும் இழந்துள்ளார், தமிழ்வின், ஆகத்து 14, 2010