தாய்லாந்து தேர்தலில் எதிர்க்கட்சி பெரும் வெற்றி
- 17 பெப்ரவரி 2025: உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது
- 17 பெப்ரவரி 2025: தாய்லாந்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினாவத்ரா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள், சூலை 4, 2011
தாய்லாந்தில் நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாடு கடந்த நிலையில் வாழும் முன்னாள் பிரதமர் சினவாத்திராவின் சகோதரியின் தலைமையிலான ஃபூ தாய் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி மேலும் நான்கு சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
யிங்லக் சினவாத்திராவின் தலைமையிலான கட்சி 265 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெற்றது. பிரதமர் அபிசித் வெச்சாசிவா சனநாயகவாதிகளின் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இக்கட்சி 160 இடங்களைப் பெற்றது.
2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து தக்சின் சினவாத்திரா பதவி இழந்தார். தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக தக்சின் தற்போது நாடு கடந்த நிலையில் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாய்லாந்து அரசியலில் மீண்டும் இணைவதற்கு தாம் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல், பெப்ரவரி 27, 2010
மூலம்
[தொகு]- Thai PM-elect Yingluck Shinawatra 'to form coalition', பிபிசி, சூலை 4, 2011
- Thailand general election: Thais hail triumph of the 'clone’ sister of Thaksin Shinawatra, டெலிகிராஃப், சூலை 4, 2011