பெருவில் சுரங்கத்தினுள் அகப்பட்ட 9 தொழிலாளர்கள் ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 11, 2012

பெருவில் சுரங்கம் ஒன்றினுள் பாறை ஒன்று வீழ்ந்ததில் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த 9 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெருவின் தெற்குப் பகுதியில் கபேசா டி நேக்ரோ என்ற இடத்தில் உள்ள செப்புச் சுரங்கம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டு 200 மீட்டர் ஆழத்தில் 9 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். இவர்களை வெளியே மீட்கும் பணி ஆரம்பிக்கபட்டு இன்று புதன்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. வெளியே கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை அவர்களது உறவினர்களும், பெருவின் அரசுத்தலைவர் ஒலாண்டா உமாலாவும் வரவேற்றனர்.


தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]