விடுதலைப் புலிகளின் ஆயுத முகவர்கள் அமெரிக்க நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்
செவ்வாய், ஜனவரி 12, 2010
- 15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 ஜனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 ஜனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமீழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை வாங்க முயன்றபோது அமெரிக்க FBI புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழ் ஆயுத முகவர்கள் சபாரட்ணம், தணிகாசலம் மற்றும் யோகராசா ஆகியோரை அமெரிக்க நீதி மன்றில் நிறுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11 இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக இருந்தாலும் யோகராசா மட்டுமே நீதி மன்றத்தில் இன்று ஆஜரானார். ஏனையவர்களை ஜனவரி 22 இல் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்திற்கு வெள்ளை உடை அணிந்து வந்த யோகராசா ஏனைய ஆயுத முகவர்களின் குடும்பங்களை நோக்கி சிரித்து கையசைத்ததுடன் ஊடகங்களுக்கு எவ்வித கருத்தையும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
இவர்கள் இலங்கை விமானப்படையின் கிபிர் விமானங்களைத் தாக்கி அழிக்க வெப்பத்தை தேடி அழிக்கும் வல்லமை கொண்ட ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 10 மற்றும் 500 ஏ.கே. 47 வகை துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்ய முயன்றபோதே அமெரிக்க புலனாய்வுத்துறையினால் கைதுசெய்யப்பட்டனர்.
நீதி மன்றத்தினால் இவர்களுக்கு தலா 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்[தொகு]
- US to sentence LTTE dealers டெய்லி மிரர் ஜனவரி 11, 2009
- Tamil-Canadians to face sentencing in N.Y.
- Sentencing delayed for Tamil-Canadians