2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்தெம்பர் 9, 2012

இலங்கையில் நேற்று இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் இரண்டு கூடுதல் (போனஸ்) இடங்கள் உட்பட அதிகூடிய 21 இடங்களைப் பெற்று இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.


இலங்கையில் வடமத்திய மாகாணம்

இம்மாகாண சபையில் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.


இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 11 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 1 இடத்தைக் கைப்பற்றியது.

இறுதி முடிவுகள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 338,552 வாக்குகள் (21 இடங்கள்)
  • ஐக்கிய தேசிய கட்சி - 196,127 வாக்குகள் (11 இடங்கள்)
  • மக்கள் விடுதலை முன்னணி - 16,066 வாக்குகள் (1 இடங்கள்)


மூலம்[தொகு]