உருசியாவின் தாகெத்தான் மாநிலக் குண்டுவெடிப்புகளில் 12 பேர் உயிரிழந்தனர்
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் மனநோய் மருத்துவமனையில் தீ, 38 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: சிரியாவின் வேதியியல் ஆயுதங்களை அழிக்க அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம்
வெள்ளி, மே 4, 2012
உருசியாவின் தாகெத்தான் மாநிலத் தலைநகர் மக்காச்கலாவிற்கு வெளியே இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் காவலரண் அருகே இந்தக் குண்டுகள் நேற்று வியாழன் அன்று வெடித்தன. இச்சம்வத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அஸ்திரகான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் மறித்துச் சோதனையிட்ட போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. 20 நிமிடங்களின் பின்னர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இறந்தவர்களில் பலர் காவல்துறையினரும், பாதுகாப்புப் பணியாளர்களுமே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல்களை யார் நடத்தியது எனத் தெரிவிக்கப்படாவிட்டாலும், தாகெசுத்தானில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அண்மைக் காலங்களில் தினமும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- உருசியாவின் தாகெசுத்தான் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர், சனவரி 28, 2011
மூலம்
[தொகு]- Dagestan Russia blasts: At least 12 dead in Makhachkala, பிபிசி, மே 4, 2012
- 13 Dead, Scores Wounded in Blasts in Dagestan, ஏபிசி, மே 4, 2012